Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள்; காங்கிரஸ் இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை: ஏ.கே.அந்தோணி

ஏப்ரல் 28, 2022 11:13

புதுடெல்லி : ''காங்கிரஸ் கட்சியின் பங்கு இல்லாமல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை,'' என, அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.அந்தோணி உடல்நலக்குறைவு காரணமாக தேசிய அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து, டில்லியில் உள்ள இல்லத்தை காலி செய்துவிட்டு கேரளாவில் குடியேற உள்ளார்.

இந்நிலையில், அந்தோணி நேற்று கூறியதாவது: காங்கிரஸ் கட்சியின் அதிகார மையமாகவும், கட்சியை வழிநடத்தும் சக்தியாகவும் நேரு குடும்பத்தினர் உள்ளனர். அந்த குடும்பத்தினர் இல்லாமல் 99 சதவீத காங்., தொண்டர்கள் கட்சியை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கட்சியை வேரில் இருந்து வலுப்படுத்தும் முயற்சியில் தலைமை ஈடுபட்டுள்ளது. எனவே, காங்கிரசை குறைத்து மதிப்பிடாதீர்கள். காங்., பங்கு இன்றி 2024ல் மத்தியில் ஆட்சி மாற்றம் சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்